Mar 20, 2026
Thisaigal NewsYouTube
சித்தி பைனுனின் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

சித்தி பைனுனின் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 24-

டவுன் சிண்ட்ரோம் எனப்படும் மனநலிவுக்கு ஆளான 13 வயது பெல்லா எனும் சிறுமியை துன்புறுத்தியதோடு அவரை முறையாக பராமரிக்காதது ஆகிய குற்றங்களுக்காக விதிக்கப்பட்டிருந்த தண்டனைக்கு எதிராக, ரூமாஹ் பொண்டா பராமரிப்பு மையத்தின் உரிமையாளர் சித்தி பைனுன் அஹ்மத் ரசாலி செய்திருந்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் மே மாதம் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

அந்த தகவலை கோலாலம்பூர் நீதிமன்றத்தின் மூத்த பதிவதிகாரி அசிசா ஜாபார் இன்று உறுதிபடுத்தினார்.

இதற்கு முன்பு, சித்தி பைனுன் மீதான மேல்முறையீட்டின் தீர்ப்பை அறிவிக்க கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று ஏப்ரல் 24 ஆம் தேதி நிர்ணயம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பெல்லாவை துன்புறுத்தியது, அவரை முறையாக கவனிக்காதது ஆகிய இரு குற்றச்சாட்டுகளை சித்தி பைனுன் புரிந்தது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதை அடுத்து, கோலாலம்பூர் சேசியேன் நீதிமன்றம் கடந்தாண்டு மே மாதம் 3ஆம் தேதி, அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையை விதித்திருந்தது.

Related News

மலேசியாவின் மானியமில்லாத எரிபொருள் விலை உயர்வு: உலகளாவிய எண்ணெய் சந்தை மாற்றங்களின் எதிரொலியே - ஆய்வாளர்கள் கருத்து

மலேசியாவின் மானியமில்லாத எரிபொருள் விலை உயர்வு: உலகளாவிய எண்ணெய் சந்தை மாற்றங்களின் எதிரொலியே - ஆய்வாளர்கள் கருத்து

ஷா ஆலாமில் கோலாகலம்: சிலாங்கூர் மாநில அளவிலான உகாதி புத்தாண்டு கொண்டாட்டம்

ஷா ஆலாமில் கோலாகலம்: சிலாங்கூர் மாநில அளவிலான உகாதி புத்தாண்டு கொண்டாட்டம்

அஸ்தி கலசங்கள் திருட்டு: கம்போடியா 'ஸ்கேம்' கும்பலுக்குத் தொடர்பு இருக்கலாம் / நிர்வாணா சந்தேகம்

அஸ்தி கலசங்கள் திருட்டு: கம்போடியா 'ஸ்கேம்' கும்பலுக்குத் தொடர்பு இருக்கலாம் / நிர்வாணா சந்தேகம்

பினாங்கு முதியோர் இல்லத்தில் பூத்த புதுக்காதல்: 91 வயது மணமகள் - 67 வயது மணமகன்

பினாங்கு முதியோர் இல்லத்தில் பூத்த புதுக்காதல்: 91 வயது மணமகள் - 67 வயது மணமகன்

அவசரகாலப் பாதை விதிமீறல்: ட்ரோன்கள் மூலம் அதிரடி வேட்டையில் சாலைப் போக்குவரத்துத்து

அவசரகாலப் பாதை விதிமீறல்: ட்ரோன்கள் மூலம் அதிரடி வேட்டையில் சாலைப் போக்குவரத்துத்து

ஜோகூர் கத்திக்குத்து சம்பவம்: வெளிநாட்டினர் 5 பேர் கைது

ஜோகூர் கத்திக்குத்து சம்பவம்: வெளிநாட்டினர் 5 பேர் கைது