Mar 20, 2026
Thisaigal NewsYouTube
இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது மாமன்னரின் புகைப்படத்தை பயன்படுத்திய இருவரை போலீசார் கைது
தற்போதைய செய்திகள்

இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது மாமன்னரின் புகைப்படத்தை பயன்படுத்திய இருவரை போலீசார் கைது

Share:

ஹுலு சிலாங்கூர், மே 06-

மே 11 ஆம் தேதி கோல குபு பாரு இடைத்தேர்தலை முன்னிட்டு, பிரச்சாரத்தின் போது மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர் - ரின் புகைப்படத்தை பயன்படுத்திய குற்றத்திற்காக இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று மாலை 6.18 மணியளவில் இச்சம்பவம் குறித்து தமது தரப்புக்கு புகார் கிடைக்க பெற்றதாக ஹுலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் அஹ்மத் பைசால் தஹ்ரீம் கூறினார்.

சம்பந்தப்பட்ட வாகனத்தில் மாமன்னரை அவமதிக்கும் வகையில் அவரின் படத்திற்கு பின்னால் அரசியல் கட்சி கொடிகள் நிறுத்தப்பட்டிருந்ததாக அஹ்மத் பைசால் தெரிவித்தார்.

அந்த காரில் மாமன்னர் உட்பட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் புகைப்படமும் அதற்கு பின்னால் கட்சி கொடிகளும் வைக்கப்பட்டிருந்ததாக அஹ்மத் பைசால் விளக்கினார்.

பச்சை நிற மஸ்டா ரக காரில் பயணித்த அவ்விருவரும் அவதூறு செயல்களை புரிந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

60 வயதிற்கு உட்பட்ட அவ்விருவரும் கைது செய்யப்பட்டு இன்று தொடங்கி செவ்வாய்க்கிழமை வரையில் மூன்று நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக அஹ்மத் பைசால் மேலும் தகவல் அளித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து