May 22, 2026
Thisaigal NewsYouTube
சம்பள உயர்வை அரசாங்கம் நாடாளுமன்றம் அங்கீகரிக்கும்
தற்போதைய செய்திகள்

சம்பள உயர்வை அரசாங்கம் நாடாளுமன்றம் அங்கீகரிக்கும்

Share:

புத்ராஜெயா, மே 02-

அரசாங்க ஊழியர்களுக்கு 13 விழுக்காட்டிற்கும் அதிகமான சம்பள உயர்வு விகிதத்தை நாடாளுமன்ற மக்களவையும், மேலவையும் அங்கீகரிக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் நேற்று அறிவித்த இந்த சம்பள உயர்வை, நாடாளுமன்றம் அங்கீகரிக்குமா? அல்லது எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கக்கூடுமா? என்று பிரதமரிம் கேட்ட போது, அவர் மேற்கண்டவாறு பதில் அளித்தார்.

பொதுச் சேவை ஊழியர்களின் இந்த சம்பள உயரவுத் திட்டத்திற்கு அரசாங்கத்தில் உள்ள மூத்த தலைவர்கள் பலர், தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர் குறிப்பாக துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி, சபா முதலமைச்சர ஹாஜி நூர் ஆகியோர் பிளவுப்படாத ஆதரவை நல்கியிருப்பதாக பிரதமர் அன்வார் விளக்கினார்.

Related News