Dec 2, 2025
Thisaigal NewsYouTube
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மெரோட்டோரியம் சலுகை
தற்போதைய செய்திகள்

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மெரோட்டோரியம் சலுகை

Share:

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு Maybank மற்றும் CIMB ஆகிய வங்கிகள் 6 மாத காலத்திற்கு மொ ரோட்டோரியம் ( morotorium ) சலுகையை வழங்கியுள்ளன.


சம்பந்தப்பட்ட வங்கிகளில் கடன் பெற்றவர்கள், தாங்கள் வாங்கி கடனுக்கான மாதாந்திர தவணைப் பணத்தை திருப்பி செலுத்துவதை 6 மாத காலத்திற்கு ஒத்திவைப்பதற்கு அந்த வங்கிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்துள்ளார்.


வெள்ளத்தினால் மிகுந்த நெருக்கடி​யில் உள்ள மக்களின் துயரத்தை உணர்ந்து இதர வங்கிகளும் இத்தகைய மொ ரோட்டோரியம் சலுகையை வழங்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாக நிதி அமைச்சருமான அன்வார் தெரிவித்தார்.

Related News