Dec 2, 2025
Thisaigal NewsYouTube
அந்த மூன்று பிள்ளைகளும் முஸ்லீம்களே உயர் நீதிமன்றம் தீர்ப்பு
தற்போதைய செய்திகள்

அந்த மூன்று பிள்ளைகளும் முஸ்லீம்களே உயர் நீதிமன்றம் தீர்ப்பு

Share:

தமது முன்னாள் கணவர் நாகேஸ்வரன் முனியாண்டியினால், ஒருதலைபட்சமாக மத மாற்றம் செய்யப்பட்ட தமது 3 பிள்ளைகள் விவகாரத்தை மறு ஆய்வுச் செய்யுமாறு தனித்து வாழும் தாயாரான லோ சியூ ஹொங் தொடுத்திருந்த வழக்கில் இன்று தோல்விக் கண்டார்.

அந்த 3 பிள்ளைகளும் ஒரு தலைபட்சமாக மத மாற்றப்பட்டாலும், அவர்களின் அந்தஸ்து முஸ்லீம்களே என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ வான் அகமது ஃபஹ்ரித் வான் சலே தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

ஒருதலைபட்சமாக மத மாற்றம் செய்வதற்கு பெர்லீஸ் மாநில சட்டம் அனுமதி அளிப்பதால், அந்த 3 பிள்ளைகளும் மத மாற்றம் செய்யப்பட்டது செல்லத்தக்கதாகும் என்று நீதிபதி வான் அகமது தெரிவித்தார்.

Related News