Jul 27, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் மாநில அரசின் ஹரிராயா பொது உபசரிப்பை கோலகுபு பாரு தொகுதியில் நடத்துவதா?
தற்போதைய செய்திகள்

சிலாங்கூர் மாநில அரசின் ஹரிராயா பொது உபசரிப்பை கோலகுபு பாரு தொகுதியில் நடத்துவதா?

Share:

சிலாங்கூர், ஏப்ரல் 26-

வரும் மே 11 ஆம் தேதி கோலகுபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் பட்சத்தில் அந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நாளை ஏப்ரல் 27 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் ஹரி ராயா பொது உபசரிப்பை கோலகுபு பாரு தொகுதியில் நாளை சனி​க்கிழமை மாலையில் நடத்துவதற்கு சிலாங்கூர் மாநில அரசு முனைந்திருப்பது, 1954 ஆம் ஆண்டு தேர்தல் சட்டத்தை மீறிய செயலாகும் என்று தேர்தல் ​சீர்திருத்த அமைப்பான Bersih கண்டனம் தெரிவித்துள்ளது.

இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நடைபெற்ற பின்னர் எந்தவொரு அரசிய​ல் கட்சியும் அல்லது அந்த கட்சியை பிரதிநிதிக்கின்ற ஸ்தாபனமும் கையூட்டுத் தன்மையிலான பொருள் அன்பளிப்போ அல்லது விருந்து உபசரிப்போ நடத்தக்கூடாது என்பது தேர்தல் சட்ட விதியின் முக்கிய நிபந்தனையாகும்.

ஓர் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதியில், அந்த இடைத்தேர்தலில் போட்டியிடக்கூடிய வேட்பாளரை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய கட்சியோ அல்லது அமைப்போ பிரச்சார தன்மையிலான நடவடிக்கையை தவிர்த்து வாக்காளர்களை கவர்வதற்கு விருந்து உபசரிப்பு நடத்தக்கூடாது.

நிலைமை இவ்வாறு இருக்க சிலாங்​கூர் மாநில அரசின் ஹரிராயா பொது உபசரிப்பை தேர்தல் நடக்கும் கோலகுபு பாரு தொகுதிக்கு மாற்றப்பட்ட விவகாரத்தில் தேர்தல் ஆணையமான SPR என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதை பெர்சே பொறுத்திருந்து பார்க்கப்போவதாக அந்த தேர்தல் ​சீர்திருத்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்