நீதிமன்ற அலுவல் நேரத்திற்கு முன்னதகாவே ஜாமீன் முகப்பிடம் மூடப்பட்டதால், ஜாமீன் பணத்தைச் செலுத்த இயலாமல், வார இறுதி நாட்களைப் போலீஸ் தடுப்பு காவலில் கழிக்க வேண்டிய துரதிர்ஷ்டத்திற்கு ஆளான 6 இளைஞர்கள், இன்று திங்கட்கிழமை ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
இன்று பொது விடுமுறை என்ற போதிலும், அந்த அறுவரும் இன்று காலை 10 மணியளவில் கோலாலம்பூர், ஜாலான் டூத்தா நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டு, ஜாமீன் முகப்பிடம் திறக்கப்பட்டு அந்த அறுவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இவ்விவகாரத்தில் சட்டத்துறை அமைச்சர் அஸாலினா ஒத்மான் சைட் தலையிட்டத்தைத் தொடர்ந்து, அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்பட்டது.
கடந்த வியாழக்கிழமை, மோசடி குற்றச்சாட்டு தொடர்பில், அந்த அறுவரையும் ஜாமினில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் அனுமதித்த போதிலும், ஜாமீன் பணத்தைச் செலுத்துவதற்குச் சென்ற போது, முகப்பிடம் முன்கூட்டியே மூடப்பட்டிருந்ததால் ஜாமீன் பணத்தைச் செலுத்த முடியாமல் அவர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டதற்கு அமைச்சர் அஸாலினா கண்டனம் தெரிவித்தார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


