Mar 22, 2026
Thisaigal NewsYouTube
வெளிநாட்டினர் ஓட்டிச் சென்ற 13 வாகனங்கள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

வெளிநாட்டினர் ஓட்டிச் சென்ற 13 வாகனங்கள் பறிமுதல்

Share:

மலாக்கா, ஜூன் 13-

மலாக்கா, புக்கிட் பியாத்து -விலுள்ள அலோர் காஜா - மலாக்கா தெங்கா - ஜாசின் நெடுஞ்சாலையில் மேற்கொண்ட Operasi Khas Hari Raya Aidiladha திடீர் சோதனையில் விதிமுறைகளை பின்பற்ற தவறிய குற்றத்திற்காக வெளிநாட்டினர் ஓட்டிச் சென்ற 13 வாகனங்களை மலாக்கா சாலைப் போக்குவரத்து அதிகாரிகள் கைப்பற்றினர்.

நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட இச்சோதனையில் சட்டவிரோதமாக செயல்பட்ட காரணத்திற்காக சம்பந்தப்பட்ட மோட்டார் மற்றும் வாகன ஓட்டுநர்கள் மீது 165 சம்மன்கள் உட்பட மொத்தம் 187 நோட்டீஸ்கள் வெளியிடப்பட்டதாக அதன் இயக்குநர் முஹம்மது பிர்தௌஸ் ஷெரீப் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, இதில் மொத்தம் 495 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட வேளையில் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 220 குற்றப்பதிவுகள் கண்டறியப்பட்டதாக முஹம்மது பிர்தௌஸ் கூறினார்.

மேலும், 30க்கும் 40க்கும் இடைப்பட்ட வயதுடைய இரண்டு ஆடவர்கள் போதைப்பொருள் உட்கொண்டிருப்பது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து கைது செய்யப்பட்டதாக முஹம்மது பிர்தௌஸ் அறிவித்தார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு