கோலாலம்பூர், ஜாலான் சுல்தான் இஸ்மாயில் சாலையில் நேற்று பிற்பகலில் ராட்சஷ மரம் ஒன்று வேரோடு பெயர்ந்துக்கொண்டு சாய்ந்ததில் பாதிக்கப்பட்ட மோனோரயில் சேவை, இன்று புதன்கிழமை மாலை 5 மணிக்கு மீண்டும் வழக்க நிலைமைக்கு திரும்பியதாக அதனை நிர்வகித்து வரும் ரேபிட் ரயில் Sdn. Bhd. நிறுவனம் அறிவித்துள்ளது.
மோரோ ரயில் இருப்புப்பாதையில் சிதறிக்கிடந்த மரக்கிளைகள் மற்றும் அவற்றின் சிதறல்கள் முழுமையாக அகற்றப்பட்டு, ரயில் இருப்புப்பாதை சரிசெய்யப்பட்ட பின்னர் இன்று மாலையில் அச்சேவை வழக்கத்திற்கு திரும்பியுள்ளதாக அந்த ரயில் நிறுவனம் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட இருப்புப்பாதையில் பரீட்சார்த்த ஓட்டம் நடத்தபட்டு, பாதுகாப்பு உறுதிசெய்யப்பபட்ட பின்னரே மோனோ ரயில் சேவைக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டதாக ரேபிட் ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.








