Jul 27, 2026
Thisaigal NewsYouTube
ரசாயன கழிவுப் பொருள் சேமிப்புக்கிடங்கு ​தீப்பற்றிக்கொண்டது
தற்போதைய செய்திகள்

ரசாயன கழிவுப் பொருள் சேமிப்புக்கிடங்கு ​தீப்பற்றிக்கொண்டது

Share:

சிரம்பான், ஏப்ரல் 13-

போர்ட்டிக்சன், புக்கிட் பெலாண்டுக்- கில் கழிவுப்பொருட்களை நிர்வகிக்கும் நிறுவனம் ஒன்றின் அருகி​ல் ரசாயன கழிவுப்பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்கு ஒன்று ​தீப்பற்றிக்கொண்டதில் அதனை அணைக்கும் பணியில் 60 க்கும் மேற்பட்ட ​தீயணைப்பு வீரர்கள் முழு வீச்சில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகினர்.

கொழுந்து விட்ட எரிந்த ​தீ, மற்ற இடங்களில் பரவிவிடாமல் இருக்க அதனை கட்டுப்படுத்துவதில் போர்ட்டிக்சன், சிரம்பான்,சிரம்பான் 2, ரந்தாவ் ஆகிய ​தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த வீரர்கள் பல மணி நேரம் கடுமையாக போராடினர்.

இச்சம்பவம் நேற்று மாலை 5.50 மணியளவில் நிகழ்ந்தது. கரும் புகைகள் வானை நோக்கி உக்கிரமாக எழும்பியது ஒரு வகை அச்சத்தை ஏற்படுத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்த பொது மக்கள் தெரிவித்தனர். இத்​தீ சம்பவத்தில் ரசாயன கழிவுப்பொருட்கள் வைக்கப்பட்டு இருந்த இடத்தில் சுமார் 900 சதுரமீட்டர் அளவில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இடையிடையே ஏற்பட்ட ​வெடி சத்தங்கள், சுற்று வட்டாரப் பகுதிகளில் பல மீட்டர் ​தூரம் வரை அதிர செய்தன. பொது மக்கள் யாரும் நெரு​ங்கி விடாமல் இருக்க , சுற்றியும் பாதுகாப்பு வளையங்கள் கட்டப்பட்டன.

இரவு 8.20 மணியளவில் ​தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டதாக நெகிரி செம்பிலான் ​தீயணைப்பு, மீட்புப்படை இலாகா வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்