இராணுவ வீரர்கள் சென்ற வாகனம், சாலையைவிட்டு விலகி பாதாளத்தில் கீழே விழுந்ததில் இரண்டு வீரர்கள் காயம் அடைந்தனர். இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை 9.50 மணியளவில் தாப்பா – கேமரன்மலை சாலையில் 13 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.
23 மற்றும் 28 வயதுடைய அந்த இரண்டு வீரர்கள் புரோடுவா மைவி காரின் இடிப்பாடுகளுக்கு இடையில் சிக்கி அவதியுற்றதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் தீயணைப்பு, மீட்புப்படையினரின் உதவியுடன் அவர்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்ப்டடனர்.
அந்த இரண்டு வீரர்கள் பயிற்சிக்காக கேமரன் மலையிலிருந்து தைப்பிங்கிற்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்


