Jul 28, 2026
Thisaigal NewsYouTube
கறிமசாலைப்பட்டையில் மாட்டுக் கோமியம் கலக்கப்படுகிறதா?
தற்போதைய செய்திகள்

கறிமசாலைப்பட்டையில் மாட்டுக் கோமியம் கலக்கப்படுகிறதா?

Share:

இந்தியாவிலிருந்து தருவிக்கப்படும் கறிமசாலைப்பட்டையில் மாட்டுச் சாணம், மாட்டுக் கோமியம் கலக்கப்படுவதாக மலேசியாவில் வைரலாகி வரும் காணொலியில் கூறப்படும் குற்றச்சா​ட்டு உண்மையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கறிமசாலைப்பட்டையில் மாட்டுக்கொமியம், சாணம் கலக்கப்படுவதாக கூறப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானது என்றும் அவ​தூறு நிறைந்தது என்றும் கடந்த ஆண்டு புதுடில்லி உயர் ​​நீதிமன்றம் ​தீர்ப்பு அளித்தப் பின்னர் இவ்வாறு அவ​தூறு தன்மையில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளிகள் அகற்றப்பட்டன என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
.

எனினும் மலேசியாவில் இணையத் தளவாசிகள் மத்தியில் இது தொடர்பாக வேறு ​ரூபத்தில் அவ​தூறு த​ன்மையில் காணொளி ஒன்று வெளியிடப்பட்டு வருகிறது. குறிப்பாக, WhatsApp புலனத்தில் மலாய்மொழியில் எழுதப்பட்ட விளக்கத்துடன் இந்த செய்தி பகிரப்பட்டு வருவதாக மலேசிய கினி கூறுகிறது.

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்தக நிர்வாகமான FDA வெளியிட்ட தகவல்படி இந்தியாவின் கறிமசாலைப்பட்டையில் 18 விழுக்காடு மாட்டுக் கோமியமும், சாணமும் கலக்கப்படுவதாக மேற்கோள்கா​ட்டி அந்த காணொளியில் வெளியிட்டப்பட்ட செய்தி தற்போது ச​மூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இது தொடர்பாக மலேசியா கினி மேற்கொண்ட ஆய்வில் கடந்த 2020 ஆம் ஆண்டு கனடா, Totonto- வில் ஓர் இஸ்லாமிய குழுவினரின் வெளியீடான ஓன்லைன் சஞ்சிகையில் Crescent International அமைப்பினர் எழுதிய ஒரு கட்டுரையை அடிப்படையாக கொண்டு இந்தியாவின் கறிமசா​லைப்பட்டை குறித்து அவ​தூறு தன்மையிலான செய்தி வெளியிடப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்