Jul 27, 2026
Thisaigal NewsYouTube
மேலும் மூன்று சாட்சிகள் விசாரணைக்கு அழைக்கப்படுவர்
தற்போதைய செய்திகள்

மேலும் மூன்று சாட்சிகள் விசாரணைக்கு அழைக்கப்படுவர்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 13-

கடந்த மார்ச் 20 ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா, டாமான்சாரா-வில் ஒரு பேரங்காடி மையத்தின் கார் நிறுத்தும் இடத்தில் பாதுகாவலரால் கண்டு பிடிக்கப்பட்ட 5 லட்சம் வெள்ளிக்கும் அதிகமான பணம் கட்டுக்கட்டாக வைக்கப்பட்டு இருந்த பணப்பெட்டி தொடர்பில் மேலும் மூன்று நபர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமார் கான் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் வாசிகளான அந்த மூன்று பேரும், அடுத்த வாரம் சாட்சியம் அளிப்பர். அந்தப் பணப்பெட்டி தன்னுடையதான் என்று ஏற்கனவே அறிவித்துள்ள வெட்டுமர நிறுவனம் ஒன்றின் இயக்குநரின் நண்பர்களாக அந்த மூன்று பேரும் விளங்குகின்றனர்.

அவர்கள் பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையத்தில் சாட்சியம் அளிப்பர் என்றுடத்தோ ஹுசைன் ஓமார் குறிப்பிட்டார்.

அந்தப் பணப்பெட்டி தொடர்பாக அந்த வெட்டுமர நிறுவனத்தின் இயக்குநர் கடந்த மார்ச் 30 ஆம் தேதி போலீசிடம் வாக்குமூலம் அளித்ததுடன் அந்தப் பணப்பெட்டி தனக்கு சொந்தமானதாகும் என்று உரிமைகோரியதாக டத்தோ ஹுசைன் ஓமார் குறிப்பிட்டார்.

முதலீடு செய்யும் நோக்கில் கடந்த ஆண்டு தம்மிடம் கடன் வாங்கிய நண்பரின் வீட்டிலிருந்து அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு வரும் போது எதிர்பாராத விதமாக அதனை தவறவிட்டதாக அந்த இயக்குநர் தனது சாட்சியித்தில் கூறியிருந்ததாக டத்தோ ஹுசைன் ஓமார் தெரிவித்து இருந்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்