கோலாலம்பூர், மே.05-
புக்கிட் அமான் குற்றத் தடுப்பு மற்றும் சமூக பாதுகாப்புத் துறை இயக்குநர் யுஸ்ரி ஹசான் பஸ்ரி, கூட்டரசுப் பிரதேச போலீசின், உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பரில், அப்பதவியிலிருந்து அஸ்மி அபு காசிம் ஓய்வு பெற்ற பிறகு, இடைக்காலமாக அப்பொறுப்பை அதன் துணை இயக்குநர் ஃபிசோல் சாலே ஏற்று செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில், அப்பதவிக்கு யுஸ்ரி ஹசான் பஸ்ரி தற்போது பொறுப்பேற்றுள்ளார்.
இதற்கு முன்பாக, புக்கிட் அமான் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை தலைவராக பொறுப்பு வகித்த யுஸ்ரி ஹசான், இவ்வாண்டு ஜனவரி மாதம், புக்கிட் அமான் குற்றத் தடுப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறைக்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.








