Mar 18, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் போலீஸ் அதிகாரி கைது
தற்போதைய செய்திகள்

முன்னாள் போலீஸ் அதிகாரி கைது

Share:

பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் போலீஸ் அதிகாரி ஒருவர் போலீஸ் சீருடை அணிந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றத்திற்காக கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

40 வயதுடைய சந்தேகிக்கும் ஆடவர் ஈப்போ, டூடா டோல் பிளாசா அருகிலுள்ள செந்தூல் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் போலீஸ் ரோந்து பிரிவின் உறுப்பினர்களால் கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

அந்நபர் போலீஸ் சீருடை அணிந்திருந்து சட்டவிரோதமாக செயல்பட்ட 14 வினாடி காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக வைரலாகியது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, சந்தேகிக்கும் ஆடவர் யமஹா மோட்டார் சைக்கிளில் பயணித்து சாலையில் ஒரு காரை வழிமறித்து சோதனை செய்ய முயற்சித்த வேளையில் ரோந்து அதிகாரிகளால் அது கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

காவல்துறை அதிகாரியைப் போல் ஆள்மாறாட்டம் செய்ததற்காக குற்றவியல் சட்டம் 170 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அல்லாவுதீன் அப்துல் மஜித் தெரிவித்தார்.

Related News

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்