May 22, 2026
Thisaigal NewsYouTube
ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த போலீஸ் மகள்
தற்போதைய செய்திகள்

ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த போலீஸ் மகள்

Share:

லஹாட் டத்து, ஏப்ரல் 17-

சபா, லஹாட் டத்து, தாமான் தபானக்கிலுள்ள ஒரு வீட்டில் போலீஸ் அதிகாரியின் 14 வயது மகள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை மாலையில், சம்பந்தப்பட்ட வீட்டின் ஓர் அறையில் அச்சிறுமி சுயநினைவின்றி இருந்ததை அவரின் 16 வயது அக்காள் கண்டறிந்ததாக விசாரணையில் தெரியவந்ததாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன்,பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையான லஹாட் டத்து மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி துல்பஹாரின் இஸ்மாயில், அச்சம்பவத்தின் போது, வீடு மாறுவது தொடர்பான விவகாரங்களைக் கவனிப்பதற்காக, கினபாத்தாங்கனில்இருந்ததாக ரசாருதீன் ஹுசைன் கூறினார்.

உயிரிழந்த சிறுமியைக் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நாளை காலை மணி 9க்கு உடற்கூறு ஆய்வு நடக்கவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், அனைத்து சாட்சியிடமும் விளக்கம் பதிவு செய்யப்பட்டுவருவதால், விசாரணை நிறைவுபெறும் வரையில் யாரும் ஆருடங்களை முன்வைக்க வேண்டாமென ரசாருதீன் ஹுசைன் வலியுறுத்தினார்.

Related News

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி