Mar 20, 2026
Thisaigal NewsYouTube
எதிர்திசையில் மைவி காரை செலுத்திய வயோதிக ஆடவர் போலீசில் சரணடைந்தார்
தற்போதைய செய்திகள்

எதிர்திசையில் மைவி காரை செலுத்திய வயோதிக ஆடவர் போலீசில் சரணடைந்தார்

Share:

குவாந்தான், ஏப்ரல் 22-

பகாங், குவாந்தான்-னில் கடந்த வெள்ளிக்கிழமை, சாலையின் எதிர்தடத்தில் ஆபத்தான முறையில், பெரோடுவா மைவி ரக காரை ஓட்டிச்சென்ற 71 வயது வயோதிக ஆடவர் போலீசில் சரணடைந்தார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், உடல் சுகாதார பிரச்னையை அவர் கொண்டுள்ளதும் வாகனத்தைச் செலுத்துவதற்கான உடல்நிலையில் இல்லாததும் கண்டறியப்பட்டுள்ளதாக, குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டென் கொமிசியோனிற் வான் மோஹட் சஹாரி வான் புசு தெரிவித்தார்.

தனது மகனுக்கு சொந்தமான காரை, அந்த வயோதிகர் ஆபத்தான முறையில் ஓட்டிச்செல்லும் காணொளி பேஸ்புக்கில் வைரலானதை அடுத்து, 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் அந்நபர் மீது போலீஸ் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலை விதிமுறையை மீறிய குற்றத்திற்காக, அவருக்கு அபராத குற்றப்பதிவு வெளியிடப்பட்டுள்ளதாகவும் வான் மோஹட் சஹாரி மேலும் கூறினார்.

Related News