Mar 16, 2026
Thisaigal NewsYouTube
அசுத்தமான உணவகங்கள் மூடப்பட ஆணை
தற்போதைய செய்திகள்

அசுத்தமான உணவகங்கள் மூடப்பட ஆணை

Share:

இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் Melaka Tengah வட்டாரத்தில் உள்ள 4 உணவகங்கள் 14 நாட்களுக்கு மூடப்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

மலாக்கா மாநில சுகாதாரம், மனிதவளம், ஒற்றுமைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் Ngwe Hee Sem தெரிவிக்கயில், சோதனை செய்யப்பட்ட அந்த உணவகங்கள் அடுத்தமாக, எலிக் கழிவுகள், கரப்பான் பூச்சி ஆகியவை இருந்ததாக குறிப்பிட்டார்.

347 உணவகங்கள் சோதனை செய்யப்பட்டு 73 அபராதங்கள் கொடுக்கப்பட்டதாகவு அவர் குறிப்பிட்டார்.

அச்சோதனையின்போது, உணவகத்தில் பணிபுரிவோருக்கான TYPHOID தடுப்பூசி செலுத்தாமை, ஏப்ரன் அணியாமை, உணவுப் பொருட்களை தரையில் வைத்தல், உணவின் காலாவதி தேதி குறிப்பிடாமை போன்ற பல்வேறு குற்றங்கள் கண்டறியப்பட்டன.

Related News