Jul 27, 2026
Thisaigal NewsYouTube
அரச மலேசிய கடற்படை இராணுவத்திற்கு சொந்தமான இரு ஹெலிகாப்டர்கள் மோதி 10 பேர் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

அரச மலேசிய கடற்படை இராணுவத்திற்கு சொந்தமான இரு ஹெலிகாப்டர்கள் மோதி 10 பேர் உயிரிழந்தனர்

Share:

பேராக், ஏப்ரல் 23-

அரச மலேசிய கடற்படை இராணுவத்திற்கு சொந்தமான இரு ஹெலிகாப்டர்கள் பயிற்சியின் போது, ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. அதில், விமானிகள் உட்பட 4 பணியாளர்கள், 3 பயணிகள் என மொத்தம் 10 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச மலேசிய கடற்படை இராணுவத்தின் 90ஆவது ஆண்டு கொண்டாட்ட விழா அடுத்த மாதம் மே 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. அந்த விழாவை முன்னிட்டு இன்று காலையில் பேராக், மஞ்சுங், லுமுட்டிலுள்ள இராணுவ முகாமில் பயிற்சி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இன்று காலை மணி 9.03 அளவில், சித்தியவான் திடலிலிருந்து புறப்பட்ட HOM மற்றும் Fennec ஆகிய இரு ஹெலிகாப்டர்கள், இராணுவ முகாம் உள்ள பகுதியினுள் பறந்துக்கொண்டிருந்த போது, ஒன்றோடு ஒன்று மோதியது.

அச்சம்பவம் தொடர்பில், காலை மணி 9.50 அளவில் அவசர அழைப்பை பெற்றதை அடுத்து, தங்கள் தரப்பு சம்பவ இடத்திற்கு விரைந்ததாக, பேராக் தீயணைப்பு மீட்பு துறை தெரிவித்துள்ளது.

சம்பவ இடத்தை வந்தடைந்த போது, இரு ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளாகியது கண்டறியப்பட்டது. அதில், ஒரு ஹெலிகாப்டரில் பயணித்திருந்த மூவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. மற்றொரு ஹெலிகாப்டரில் எழுவர் பயணித்திருந்ததாக கூறப்பட்டுள்ளது.

தற்போது, ஹெலிகாப்டரினுள் சிக்கியுள்ளவர்களை வெளியே கொண்டுவரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பேராக் தீயணைப்பு மீட்பு துறை அதன் அறிக்கையில் கூறியிருந்தது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்