Jun 22, 2026
Thisaigal NewsYouTube
பேரங்காடி பணப் பொறுப்பாளர் RM568,200 மோசடி: 2 ஆண்டுகள் சிறை
தற்போதைய செய்திகள்

பேரங்காடி பணப் பொறுப்பாளர் RM568,200 மோசடி: 2 ஆண்டுகள் சிறை

Share:

டச் அண்ட் கோ ரொக்க மதிப்பை அதிகரிக்கச் செய்யும் ரீலோட் முனையத்தைப் பயன்படுத்தி RM568,200 மோசடி செய்த வழக்கில், பல்பொருள் பேரங்காடியின் முன்னாள் கேஷியரான 29 வயதுடைய நூர் அதிகா அஷிரா ஃபௌசி என்ற பெண்ணுக்குக் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

கெப்போங்கில் உள்ள ஒரு பல்பொருள் பேரங்காடியில் பணியாற்றிய அவர், முறைகேடாக ரீலோட் குறியீடுகளை உருவாக்கித் தன் சொந்த கணக்கிலும், நண்பர்கள் மற்றும் உடன்பிறப்புகளின் கணக்குகளிலும் பணத்தை மாற்றியுள்ளார்.

முன்னாள் காதலரின் ஆடம்பர வாழ்க்கைக்குப் பணம் சேர்க்கவே இந்தத் திட்டமிட்ட மோசடியைச் செய்ததாக அவர் தரப்பில் கூறப்பட்ட போதிலும், நம்பிக்கை மோசடி மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளின் கீழ் அவருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Related News