May 22, 2026
Thisaigal NewsYouTube
சிஸ்டர் என்டா ராயான்க்கு நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கண்ணீர் அஞ்சலி
தற்போதைய செய்திகள்

சிஸ்டர் என்டா ராயான்க்கு நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கண்ணீர் அஞ்சலி

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 11 -

தனது 96 ஆவது வயதில் காலமான பெட்டாலிங் ஜெயா, அசுந்தா இடைநிலைப்பள்ளியின் தோற்றுநரும், அப்பள்ளி வாரியத்தின் தலைவருமான சிஸ்டர் என்டா ராயான்வின் இறுதி சடங்கு இன்று நடைபெற்றது. சிஸ்டர் என்டா ராயான் நல்லுடலுக்கு நூற்றுக்கணக்கான முன்னாள் மாணவர்கள், நண்பர்கள், பொது இயக்கங்களின் பொறுப்பாளர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.

இன்று காலை 10.30 மணியளவில் பெட்டாலிங் ஜெயா, St. Francis Xaviers தேவாலயத்தில் சிஸ்டர் என்டா ராயானின் உடல் கிடத்தி வைக்கப்பட்டு, பொது மக்களின் அஞ்சலிக்கு பிறகு பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற மின்சுடலையில் தகனம் செய்யப்பட்டது.

முன்னதாக, முன்னாள் மாணவர்கள் புடை சூழ சிஸ்டர் என்டா ராயான்வின் உடலைத் தாங்கிய பிரேத வண்டி, அவர் தோற்றுவித்த அசுந்தா பள்ளி வளாகத்தையும், மருத்துவமனையையும் வலம் வந்து, அந்த கன்னியாஸ்திரியின் அருஞ்சேவைக்கு நன்றி தெரிவித்து, அவரின் இறுதிப்பயணத்திற்கு பிரியாவிடை தந்த போது சோகமே உருவானது.

அயர்லாந்தில் பிறந்து வளர்ந்து , மலாயா முன்னாள் தலைமை நீதிபதி Sir Michael Hogan அழைப்பின் பேரில் கல்விப்பணியை மேற்கொள்ள 1954 ஆம் ஆண்டு மலாயாவிற்கு அழைத்து வரப்பட்ட சிஸ்டர் என்டா ராயான் , பெட்டாலிங் ஜெயாவில் அசுந்தா பள்ளியை நிறுவினார்.

தவிர, சிறிய அளவில் Ave Maria Clinic ஒன்றை திறந்து தொண்டுப்பணியை தொடங்கிய சிஸ்டர் என்டா ராயான்வின் அந்த கிளினிக்-தான் பின்னாளில் பெட்டாலிங் ஜெயாவில் அசுந்தா மருத்துவமனையாக உருவாக்கம் கண்டது.

Related News

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்