Mar 20, 2026
Thisaigal NewsYouTube
கடன்பட்டிருப்பது உண்மையே ஆனால், ஆ லோங்கிடம் அல்ல
தற்போதைய செய்திகள்

கடன்பட்டிருப்பது உண்மையே ஆனால், ஆ லோங்கிடம் அல்ல

Share:

சிலாங்கூர், மே 04-

ஒரு வர்த்தகர் என்ற முறையில் தாம் கடன்பட்டு இருப்பது உண்மையே. ஆனால், வட்டி முதலைகளிடம் அல்ல என்று கோலகுபு பாரு இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளராக போட்டியிடும் கைருல் அஸ்ஹரி சௌத் இன்று நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

Ah Long என்று கூறப்படும் சட்டவிரோத வட்டி முதலைகளிடம் தாம் கடன் பெற்று இருப்பதாகவும், தம்முடைய ATM வங்கி அட்டையை வட்டி முதலைகள் பிடித்து வைத்திருப்பதாகவும் போன்ற ஓர் அவதூறான பிரச்சாரத்தை இந்த இடைத் தேர்தலில் எதிர்தரப்பினர் தொடங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த இடைத் தேர்தலில் தனது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த வேண்டும், நம்பகத்தன்மையை சிதைக்க வேண்டும் என்ற தீய நோக்கில் திட்டமிட்டு இந்தப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்..

நேற்று கெர்லிங்கில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது, நிருபர்கள் எழுப்பிய சரமாரியான கேள்விகளுக்கு தாம் பதில் அளிக்காததற்கு முக்கிய காரணம், தேவையற்ற விவகாரங்களில் கவனம் செலுத்தக்கூடாது என்பதே தவிர பதில் அளிக்க முடியாது என்பது அல்ல என்று கைருல் அஸ்ஹரி சௌத் விளக்கம் அளித்துள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து