தாய்லாந்து, ஏப்ரல் 29-
தாய்லாந்து, நராதிவாட், சுங்காய் கொலோக்-கில் இன்று அதிகாலையில் நிகழ்ந்து இருக்கலாம் என்று நம்பப்படும் குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து மலேசியா – தாய்லாந்து எல்லைப்பகுதியின் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் தெரிவித்தார்.

அதேவேளையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் தாய்லாந்து போலீசாருடன் மலேசிய போலீசார் ஒத்துழைப்பு நல்குவர் என்றும் ஐஜிபி குறிப்பிட்டார்.
மலேசியா மற்றும் தாய்லாந்து போலீசாரிடையே நல்லுறவு இருந்து வருகிறது. குறிப்பாக, மலேசியா – தாய்லாந்து எல்லைப் பாதுகாப்பு விவகாரத்தில் கூடுதல் ஒத்துழைப்பு இருந்து வருவதாக ரசாருதீன் ஹுசைன் தெரிவித்தார்.








