Mar 21, 2026
Thisaigal NewsYouTube
ஐஸ்வர்யாவின் உடைகளை காவடியுடன் ஒப்பிடுவதா? அறங்காவல் சிவகுமார் கண்டனம்
தற்போதைய செய்திகள்

ஐஸ்வர்யாவின் உடைகளை காவடியுடன் ஒப்பிடுவதா? அறங்காவல் சிவகுமார் கண்டனம்

Share:

கோலாலம்பூர், மே 27-

மலேசியாவின் பிரபல சமையல்கலை நிபுணர் செஃப் வான் என்ற டத்தோ ரெட்சுவான் இஸ்மாயில், பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் – யின் ஆடையை, தைப்பூச உற்சவத்தின்போது எடுக்கப்படும் காவடியுடன் ஒப்பிட்டு பேசியிருப்பது வரம்புமீறிய செயலாகும் என்று கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் அறங்காவலர் தலைவர் டத்தோ N. சிவகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

செஃப் வான் – னின் நோக்கம் நகைச்சுவையைத் தவிர வேறோன்றுமில்லை என்றாலும் அதை இந்திய சமூகத்தினரால் குறிப்பாக, இந்துப் பெருமக்களால் அறவே ஏற்றுக்கொள்ள முடியாது என்று டத்தோ சிவகுமார் குறிப்பிட்டார்.

நன்கு மதிக்கப்படுபரான செஃப் வான், தன்னுடைய நன்மதிப்பை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமே தவிர மற்றவர்களின் மனதை புண்படுத்தக்கூடிய செயலில் ஈடுபடக்கூடாது என்று டத்தோ சிவகுமார் வலியுறுத்தினார்.

உண்மையிலேயே இதில் நகைச்சுவை இழையோடும் விஷயம் என்னெவென்று தெரியவில்லை. ஆனால், நகைச்சுவை என்ற போர்வையில் ஒரு நடிகையின் ஆடையை, இந்துக்கள் போற்றும் பத்துமலைத்திருத்தல தைப்பூச காவடியுடன் ஒப்பிட்டு பேசுவது கண்டிக்கத்தக்கதாகும்.

தைப்பூச கொண்டாட்டத்தின் அடையாளமாக விளங்கும் மயிலுடன் ஒப்பிட்டு, ஐஸ்வர்யா ராய் – யின் ஆடையை செஃப் வான், உவமைக்காட்டி பேசியிருக்கலாம். ஆனால், இவ்வாறு நகைச்சுவையாக உவமைக்காட்டுவது மிகப்பெரிய தவறு, இது இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் என்பதை ஒரு சமையல் கலை நிபுணராக விளங்கும் செஃப் வான் அறிந்திருக்க வேண்டும் என்று டத்தோ சிவகுமார் குறிப்பிட்டார்.

தன்னுடைய செயலுக்கு செஃப் வான் பல காரணங்கள் கூறுலாம். ஆனால் இது விளையாட்டான விஷயம் அல்ல. இந்துக்களின் மனதை புண்படுத்தியதற்காக அந்த சமையல் கலை நிபுணர், பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று டத்தோ சிவகுமார் மலேசியா கெசட் வழங்கிய பேட்டியில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து