Mar 18, 2026
Thisaigal NewsYouTube
தீவிர சிகிச்சைக்குப் பின் ஆடவர் வீடு திரும்பினார்
தற்போதைய செய்திகள்

தீவிர சிகிச்சைக்குப் பின் ஆடவர் வீடு திரும்பினார்

Share:

காப்பார், மார்ச் 22.

கடந்த மார்ச் 6 ஆம் தேதி காப்பாரில், ஜாலான் ராஜா மொக்த்தார் பகுதியில் 46 வயது பாதுகாவலர் நிறுவனத்தை சேர்ந்த ஆடவர் ஒருவர் துப்பாக்கியினால் சுடப்பட்ட சம்பவம் தொடர்பில் வட கிள்ளான் மாவட்ட போலீசார் புலன் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளர்.

பாதுகாவல் மேற்பார்வையாளரான சம்பந்தப்பட்ட ஆடவர், கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்குப் பின் கடந்த வாரம் வீடு திரும்பியுள்ளதாக வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி எஸ்.விஜய ராவ் கூறினார்.

சம்பவத்தின் போது அந்நபரின் வலது கையில் துப்பாக்கி தோட்டா பாய்ந்தது. இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திய. சந்தேகப் பேர்வழியை போலீசார் தேடி வருவதாகவும், துப்பாக்கிச் சூட்டின் போது அப்பேர்வழி பயன்படுத்திய வாகனத்தின் பதிவு எண் போலியானது என்றும் புலன் விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஏசிபி எஸ்.விஜய ராவ் கூறினார்.

புலன் விசாரணைக்கு உதவும் வகையில் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்ட ஐந்து ஆடவர்கள், விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று எஸ்.விஜய ராவ் குறிப்பிட்டார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை