Mar 19, 2026
Thisaigal NewsYouTube
உடலில் பலத்த காயங்களுடன் இந்திய மாது கொலை
தற்போதைய செய்திகள்

உடலில் பலத்த காயங்களுடன் இந்திய மாது கொலை

Share:

கூலிம், ஏப்ரல் 12-

61 வயதுடைய இந்திய மாது ஒருவர் உடலில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, இறந்திருப்பதாக கூலிம் மாவட்ட தலைமை காவல்துறை அதிகாரி சூப்ரின்டென்டன் முகமட் அஜிசுல் பின் முகமட் கைரி தெரிவித்தார் .

கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி இரவு 9.00 மணியளவில் அம்மாது கூலிம் லாடாங் பிஎம்ஆர் பத்து பூத்தே தோட்டத்தில் உள்ள அவரின் வீட்டு கழிவறையில் விழுந்ததாகவும், பிறகு அவர் கூலிம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மறுநாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் கிடைக்க பெற்றதாக முகமட் அஜிசுல் கூறினார்.

ஆனால், மருத்துவப் பரிசோதனையில் அம்மாதுவின் தலையிலும் உடலிலும் படுங்காயங்கள் இருந்ததாகவும் அவர் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்து அவரின் 57 வயதுடைய கணவரை விசாரணைக்கு உதவும் வகையில் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டதாக முகமட் அஜிசுல் தெளிவுப்படுத்தினார்.

மேலும் கைது செய்யப்பட்ட அந்நபர் ஆறு நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக முகமட் அஜிசுல் குறிப்பிட்டார்.

Related News