பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஹரி ராயா பொது உபசரிப்புகள், பாஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வரும் திரெங்கானு, கிளந்தன் மற்றும் கெடா ஆகிய மூன்று மாநிலங்களில் நடைபெறவிருக்கின்றன.
மலேசிய வரலாற்றில் பிரதமர் ஒருவரின் ஹரிராயா பொது உபசரிப்பு, கிள்ளான் பள்ளத்தாக்கிற்கு வெளியே நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
பிரதமரின் பொது உபசரிப்பு, கெடா மாநிலத்தில் அலோர் ஸ்டார், ஹோட்டல் ரஹிய வில் வரும் ஏப்ரல் 29 ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும். கிளந்தானில் மே 12 ஆம் தேதி இரவு 7.30 மணி முதல் இரவு 10.30 மணி வரையில் சுல்தான் முஹம்மாட் அரங்கில் நடைபெறும்.
திரெங்கானுவில் மே 13 ஆம் தேதி இரவு 7 மணி முதல் இரவு 10.30 மணி வரையில் சுல்தான் ஜைனால் அபிடின் பல்கலைக்கழகத்தில் டேவான் முக்தஃபி பில்லா ஷா மண்டபத்தில் நடைபெறும் என்று பிரதமர் துறை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

புதிய கட்சிகளால் தேசிய முன்னணிக்கு பாதிப்பில்லை: ஜம்ரி அப்துல் காதிர் உறுதி

இராணுவ முகாம் குண்டுவெடிப்பு: சாட்சிகளிடம் வாக்குமூலம் பெற போலீஸ் முடிவு

மலேசியாவில் இடைநிலைப்பள்ளி கல்வி கட்டாயமாக்கப்படுகிறது: 95 விழுக்காடு மாணவர் சேர்க்கையை இலக்காகக் கொண்ட கல்வி அமைச்சு

பிரபல கேடி 'போத்தா சின்னை' பரிசோதித்த டாக்டர் மகாதேவன்

பள்ளிகளில் குற்றச்செயல்களைத் தடுக்க புதிய திட்டம்: தொடர்பு அதிகாரிகள் நியமனம்


