பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஹரி ராயா பொது உபசரிப்புகள், பாஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வரும் திரெங்கானு, கிளந்தன் மற்றும் கெடா ஆகிய மூன்று மாநிலங்களில் நடைபெறவிருக்கின்றன.
மலேசிய வரலாற்றில் பிரதமர் ஒருவரின் ஹரிராயா பொது உபசரிப்பு, கிள்ளான் பள்ளத்தாக்கிற்கு வெளியே நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
பிரதமரின் பொது உபசரிப்பு, கெடா மாநிலத்தில் அலோர் ஸ்டார், ஹோட்டல் ரஹிய வில் வரும் ஏப்ரல் 29 ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும். கிளந்தானில் மே 12 ஆம் தேதி இரவு 7.30 மணி முதல் இரவு 10.30 மணி வரையில் சுல்தான் முஹம்மாட் அரங்கில் நடைபெறும்.
திரெங்கானுவில் மே 13 ஆம் தேதி இரவு 7 மணி முதல் இரவு 10.30 மணி வரையில் சுல்தான் ஜைனால் அபிடின் பல்கலைக்கழகத்தில் டேவான் முக்தஃபி பில்லா ஷா மண்டபத்தில் நடைபெறும் என்று பிரதமர் துறை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

சமய விவகாரங்களை அதிகாரிகள் கவனமாகக் கையாள வேண்டும் - பாஸ் வலியுறுத்து

வங்கதேச வெளியுறவு அமைச்சருடன் மலேசிய தூதர் சந்திப்பு/ மலேசிய வாகன உற்பத்தி பாகங்கள் வங்கதேசத்தில் ஒன்றிணைக்கும் வாய்ப்புகள் ஆய்வு

சிலாங்கூரில் 105 கிலோ போதைப் பொருள் பறிமுதல் - இருவர் கைது

ஈப்போவில் நோன்பைத் தவிர்த்துவிட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 முஸ்லிம்கள் கைது

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு


