பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஹரி ராயா பொது உபசரிப்புகள், பாஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வரும் திரெங்கானு, கிளந்தன் மற்றும் கெடா ஆகிய மூன்று மாநிலங்களில் நடைபெறவிருக்கின்றன.
மலேசிய வரலாற்றில் பிரதமர் ஒருவரின் ஹரிராயா பொது உபசரிப்பு, கிள்ளான் பள்ளத்தாக்கிற்கு வெளியே நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
பிரதமரின் பொது உபசரிப்பு, கெடா மாநிலத்தில் அலோர் ஸ்டார், ஹோட்டல் ரஹிய வில் வரும் ஏப்ரல் 29 ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும். கிளந்தானில் மே 12 ஆம் தேதி இரவு 7.30 மணி முதல் இரவு 10.30 மணி வரையில் சுல்தான் முஹம்மாட் அரங்கில் நடைபெறும்.
திரெங்கானுவில் மே 13 ஆம் தேதி இரவு 7 மணி முதல் இரவு 10.30 மணி வரையில் சுல்தான் ஜைனால் அபிடின் பல்கலைக்கழகத்தில் டேவான் முக்தஃபி பில்லா ஷா மண்டபத்தில் நடைபெறும் என்று பிரதமர் துறை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது


