பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஹரி ராயா பொது உபசரிப்புகள், பாஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வரும் திரெங்கானு, கிளந்தன் மற்றும் கெடா ஆகிய மூன்று மாநிலங்களில் நடைபெறவிருக்கின்றன.
மலேசிய வரலாற்றில் பிரதமர் ஒருவரின் ஹரிராயா பொது உபசரிப்பு, கிள்ளான் பள்ளத்தாக்கிற்கு வெளியே நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
பிரதமரின் பொது உபசரிப்பு, கெடா மாநிலத்தில் அலோர் ஸ்டார், ஹோட்டல் ரஹிய வில் வரும் ஏப்ரல் 29 ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும். கிளந்தானில் மே 12 ஆம் தேதி இரவு 7.30 மணி முதல் இரவு 10.30 மணி வரையில் சுல்தான் முஹம்மாட் அரங்கில் நடைபெறும்.
திரெங்கானுவில் மே 13 ஆம் தேதி இரவு 7 மணி முதல் இரவு 10.30 மணி வரையில் சுல்தான் ஜைனால் அபிடின் பல்கலைக்கழகத்தில் டேவான் முக்தஃபி பில்லா ஷா மண்டபத்தில் நடைபெறும் என்று பிரதமர் துறை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

மலாய் மொழியை ஏற்காதவர்கள் மலேசியாவில் வசிக்க வேண்டாம் - மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அதிரடி

நஜிப் ரசாக் - தோம்மி தோமஸ் இடையிலான அவதூறு வழக்கு சமரசத்தில் முடிந்தது

ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு புதிய தளம் தயார்: சமய நல்லிணக்கத்தைப் பேண அரசாங்கம் உறுதி

ரேபிட் ஆன்-டிமாண்ட் (Rapid On-Demand ) வேன் சேவைக்கான புதிய கட்டண முறை அறிவிக்கப்பட்டுள்ளது

முன்னாள் வங்கி நிர்வாகி கைது: எஸ்பிஆர்எம் நடவடிக்கை


