பினாங்கில் இன்று செப்டம்பர் 7 ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ள புதிய ஃபேரி-க்கான பயணக் கட்டண அறிமுகத்தில் பேருந்துக்கான பயணக் கட்டண சேவையையும் ஒருங்கிணைப்பது குறித்து மாநில அரசாங்கம் பரிசீலனை செய்து வருவதாக ஆட்சிக்குழு உறுப்பினர் ஜைரில் கிர் ஜோஹாரி தெரிவித்துள்ளார்.
ஒரே பயணக் கட்டண அட்டையில் ஃபேரி சேவை மற்றும் பேருந்து சேவை ஆகியவற்றை உள்ளடக்குவது குறித்து தற்போது ஆராயப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
ஃபேரி-க்கும் பேருந்துக்கும் வெவ்வேறு கட்டண முறை அவ்விரு சேவைகளையும் பயன்படுத்தும் பயணிகளுக்கு நிதிச் சுமையை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அவ்விரு கட்டணத்தையும் ஒரே அட்டையில் இணைப்பதுக் குறித்து பரிசீலிக்கப்படுவதாக ஜைரில் கிர் குறிப்பிட்டார்.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்


