Jul 6, 2026
Thisaigal NewsYouTube
கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலை மேம்பாடுகள்: மதிப்பீட்டு அறிக்கையின் பரிந்துரைகள் பின்பற்றப்படும்
தற்போதைய செய்திகள்

கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலை மேம்பாடுகள்: மதிப்பீட்டு அறிக்கையின் பரிந்துரைகள் பின்பற்றப்படும்

Share:

கெரிக், ஜூன்.12-

பேராக் கெரிக் முதல் கிளந்தான் ஜெலி வரையிலான கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலைக்கான மேம்பாடுகள், நடப்பு மதிப்பீடு அறிக்கையில் வழங்கப்பட்ட பரிந்துரைகளின்படி, அதன் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலெக்ஸண்டர் நந்தா லிங்கி அறிவித்துள்ளார்.

கிழக்கையும், மேற்கையும் இணைக்கும் அந்த நெடுஞ்சாலை தொடர்பான மதிப்பீடு, இவ்வாண்டு மார்ச் மாதம் தொடங்கி கடந்த மாதம் நிறைவடைந்ததாக அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்ஸண்டர் குறிப்பிட்டார்.

Multi Laser Profiler, Falling Weight Deflectometer, Dynamic Cone Penetrometer மற்றும் Trial Pit methods முதலிய அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக அலெக்ஸண்டர் தெரிவித்தார்.

இந்த நெடுஞ்சாலையின் தரத்தை உயர்த்தும் நோக்கி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

கிழக்கு மேற்கு நெடுஞ்சாலையில் கெரிக் பகுதியில் கடந்த திங்கட்கிழமை உப்சி பல்லைக்கழகத்தை சேர்ந்த 15 மாணவர்கள் பேருந்து விபத்தில் உயிரிழந்தது தொடர்பில் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு இன்று நேரடியாக வருகை புரிந்து, பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அலெக்ஸண்டர் இதனைக் குறிப்பிட்டார்.

சம்பவம் நடந்த இடத்தில் சூரிய சக்தியில் இயங்கும் விளக்குகளும் நிறுவப்படும் என்றும், அவற்றின் நிர்மாணிப்புப் பணிகள் வரும் ஜூலை மாதம் தொடங்கப்படுவதற்கு திட்டமிடப்பட்டள்ளதாக அவர் கூறினார்.

15 மாணவர்கள் கொல்லப்பட்ட இந்தத் துயரச் சம்பவம் தம்மை வேதனையில் ஆழ்த்துவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Related News

உலு கிந்தா ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்: சட்டச் சிக்கலைத் தவிர்க்க ஆலயங்களைப் பதிவு செய்ய டத்தோ சிவநேசன் வலியுறுத்தல்

உலு கிந்தா ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்: சட்டச் சிக்கலைத் தவிர்க்க ஆலயங்களைப் பதிவு செய்ய டத்தோ சிவநேசன் வலியுறுத்தல்

இந்தியச் சமூகத்தின் கல்வி மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்குத் தோள் கொடுக்கும் வோங் போர் யாங்

இந்தியச் சமூகத்தின் கல்வி மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்குத் தோள் கொடுக்கும் வோங் போர் யாங்

வெளிநாட்டுத் தொழிலாளர் கோட்டா நிர்வாகம் இனி டிஜிட்டல் மயம்: அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர். ரமணன் அதிரடி

வெளிநாட்டுத் தொழிலாளர் கோட்டா நிர்வாகம் இனி டிஜிட்டல் மயம்: அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர். ரமணன் அதிரடி

மலேசியாவின் எதிர்கால வெற்றிக்கு மனிதவளத் தரமே முக்கியம் – துணைப் பிரதமர் வலியுறுத்து

மலேசியாவின் எதிர்கால வெற்றிக்கு மனிதவளத் தரமே முக்கியம் – துணைப் பிரதமர் வலியுறுத்து

54 நிறுவனங்களிடமிருந்து எந்த நிதி பலனும் பெறவில்லை – ஜனா விபாவா வழக்கில் தெங்கு ஸஃப்ருல் சாட்சி

54 நிறுவனங்களிடமிருந்து எந்த நிதி பலனும் பெறவில்லை – ஜனா விபாவா வழக்கில் தெங்கு ஸஃப்ருல் சாட்சி

வழிப்பாட்டுத்தலம் அருகே பயங்கர தாக்குதல் – ஒருவர் கவலைக்கிடம்; 5 பேர் கைது

வழிப்பாட்டுத்தலம் அருகே பயங்கர தாக்குதல் – ஒருவர் கவலைக்கிடம்; 5 பேர் கைது