Jul 27, 2026
Thisaigal NewsYouTube
வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை 2.2 மில்லியன்
தற்போதைய செய்திகள்

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை 2.2 மில்லியன்

Share:

கோலாலம்பூர், மார்ச் 26 -

நாட்டில் குடியிருக்கும் மொத்த வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை 12 ஆவது மலேசிய திட்டத்தின் இலக்கை நெருங்கியிருப்பதாக மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் தெரிவித்தார்.

வருகின்ற 2025 ஆம் ஆண்டிற்குள் நாட்டில் அந்நிய தொழிலாளர்களின் எண்ணிக்கை 15 சதவீதத்தை தாண்டக் கூடாது என்று அரசாங்கம் இலக்கு கொண்டிருப்பதாக ஸ்டீவன் சிம் கூறினார்.

மலேசிய குடிநுழைவுத்துறையின் கணக்கின்படி, கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி வரையில் நாட்டில் பணிபுரியும் மொத்த வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை 21 லட்சத்து 71 ஆயிரத்து 798 பேர் என்று அறியப்படுவதாக ஸ்டீவன் சிம் விளக்கினார்.

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை RMK12- யின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நெருங்கிவிட்ட நோக்கத்தினால் அந்நிய பணியாளர்களை வரவழைக்கும் புதிய ஒதுக்கீட்டின் ஒப்புதலை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என்று ஸ்டீவன் சிம் நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்