ஷா ஆலாம், செத்தியா ஆலாமில் நேற்று மாலை வேலை முடிந்து தனியாக வீட்டிற்கு நடந்து சென்ற 20 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவரைச் சில்மிஷம் செய்த மர்ம நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மாலை 7.10 மணியளவில் ஒரு ஆள்நடமாட்டமற்ற ஒற்றையடிப் பாதையில் நடந்து சென்றபோது, சிவப்புச் சட்டையும் கருப்பு காற்சட்டையும் அணிந்திருந்த ஒரு நபர், அப்பெண்ணைப் பின்னால் இருந்து தாக்கி, வாயைப் பொத்தி சில்மிஷம் செய்ததாக ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் சாருடின் சாமா தெரிவித்தார்.
குற்றவியல் சட்டம் பிரிவு 354-இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் தெரிந்தவர்கள் புலனாய்வு அதிகாரி முஹம்மது ஜம்ரியை 011-16652402 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.








