Mar 18, 2026
Thisaigal NewsYouTube
2026 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி மலேசியா ஏற்று நடத்தாது அமைச்சரவை முடிவு
தற்போதைய செய்திகள்

2026 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி மலேசியா ஏற்று நடத்தாது அமைச்சரவை முடிவு

Share:

2026 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை மலேசியா ஏற்று நடத்தாது என்று அமைச்சரவை முடிவெடுத்துள்ளதாக இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னாஹ் இயோஹ் அறிவித்துள்ளார்.

இந்த அனைத்துலக விளையாட்டுப் போட்டியை மலேசியா ஏற்று நடத்துவதால் ஏற்படக்கூடிய சாதக,பாதக விளைவுகளை நன்கு ஆராய்ந்ததில் மலேசியாவிற்கு வழங்கப்பட்ட அந்த வாய்ப்பை நிராகரிப்பது என்று அமைச்சரவை முடிவெடுத்துள்ளதாக ஹன்னா இயோ குறிப்பிட்டார்.

2026 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியை ஏற்று நடத்தும் உபசரணை நாடு என்ற முறையில் ஆஸ்திரேலியா விலகிக்கொண்டதைத் தொடர்ந்து கடந்த 1998 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை மிகச்சிறப்பாக நடத்திய நாடு என்ற முறையில், இம்முறை கோலாலம்பூருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக ஹன்னா இயோ தெரிவித்தார்.

காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி சம்மேளனம், கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி, மலேசியாவிற்கு இந்த வாய்ப்பை வழங்கியதாக ஹன்னா இயோ சுட்டிக்காட்டினார்..

இது தொடர்பாக அந்த சம்மேளனத்தின் பொறுப்பாளர்களுடன், தாமும் , இரண்டாவது நிதி அமைச்சர் அமீர் ஹம்ஜாஹ் அசிசான்-னும் நடத்திய பேச்சுவார்த்தையின் உள்ளடக்கம் குறித்து இன்று அமைச்சரவைக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

அந்த அனைத்துலகப் போட்டியை மலேசியா ஏற்று நடத்த வேண்டுமானால், 603 மில்லியன் வெள்ளி அல்லது 60 கோடியே 30 லட்சம் வெள்ளி செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டது. நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு அந்த வாய்ப்பை நிராகரிப்பதென அமைச்சரவை முடிவெடுத்துள்ளதாக ஹன்னா இயோ குறிப்பிட்டார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை