இவ்வாண்டு ஜூன் 11ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் தொழிலாளர் சேமநிதி வாரியமான இ.பி.எப்.பின் இரண்டாவது கணக்கிலிலுள்ள பணத்தை வைத்து கடன் பெறுவது தொடர்பில், 98 கோடியே 19 லட்சம் வெள்ளி மதிப்புள்ள விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
அந்த தொகையில் 87 கோடியே 86 லட்சம் வெள்ளி மலேசியா பியுல்டிங் சொசைட்டி பெர்காட் வாயிலாகவும் 10 கோடியே 33 லட்சம் வெள்ளி பேங்க் சிம்பானான் நேஷ்னல் மூலமாகவும் செலுத்தப்பட்டது அது தெரிவித்ததுள்ளது.
எப்.எஸ்.ஏ. 2 எனப்படும் இந்த கடனுதவித் திட்டத்திற்கு 168,925 பேரிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைத்த வேளையில், 88,414 பேரின் விண்ணப்பங்கள் தகுதி பெற்றுள்ளன. அவர்களில் 47,696 பேர் இந்த கடனுதவியை ஏற்றுக் கொள்ள ஒப்புதல் அளித்துள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை


