இவ்வாண்டு ஜூன் 11ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் தொழிலாளர் சேமநிதி வாரியமான இ.பி.எப்.பின் இரண்டாவது கணக்கிலிலுள்ள பணத்தை வைத்து கடன் பெறுவது தொடர்பில், 98 கோடியே 19 லட்சம் வெள்ளி மதிப்புள்ள விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
அந்த தொகையில் 87 கோடியே 86 லட்சம் வெள்ளி மலேசியா பியுல்டிங் சொசைட்டி பெர்காட் வாயிலாகவும் 10 கோடியே 33 லட்சம் வெள்ளி பேங்க் சிம்பானான் நேஷ்னல் மூலமாகவும் செலுத்தப்பட்டது அது தெரிவித்ததுள்ளது.
எப்.எஸ்.ஏ. 2 எனப்படும் இந்த கடனுதவித் திட்டத்திற்கு 168,925 பேரிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைத்த வேளையில், 88,414 பேரின் விண்ணப்பங்கள் தகுதி பெற்றுள்ளன. அவர்களில் 47,696 பேர் இந்த கடனுதவியை ஏற்றுக் கொள்ள ஒப்புதல் அளித்துள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related News

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

மலேசியாவில் இன்று மாலை 7 மணி வரை பலத்த மழை எச்சரிக்கை!


