பேரா, மஞ்சோங், ஆயர் தவாரில் உள்ள ஒரு வீட்டில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவத்தின் போது, 85 வயது முதியவரைக் கொலை செய்ததாக 27 வயது துப்புரவு பணியாளர் மீது மஞ்சோங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
எம். மணிமாறன் என்ற அந்த நபர், மாஜிஸ்திரேட் நஹ்திய்யா சே அப் ரஹீம் முன்னிலையில் நிறுத்தப்பட்டு அவருக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது. இக் கொலை வழக்கு உயர் நீதிமன்ற அதிகார வரம்பிற்கு உட்பட்டவை என்பதால், அவரிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
கடந்த மே 7-ஆம் தேதி அதிகாலை 3 மணி மணியளவில் மஞ்சோங், ஆயர் தாவார், ஜாலான் மலாயுவில் உள்ள ஒரு வீட்டில் வீட்டில் 85 வயது டாங் கை கோங் என்ற முதியவரின் மரணத்திற்குக் காரணமானதாக மணிமாறன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காக இந்த வழக்கு வரும் வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்ட மணிமாறன், , மெத்தம்பேட்டமைன் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான மற்றொரு குற்றச்சாட்டை மணிமாறன் மறுத்து, விசாரணை கோரியுள்ளார்.








