நாட்டில் உள்ள 36 பாலிடெக்னிக்கு கல்லூரிகளிலும் சான்றிதழ் மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு அப்பால், டிகிரி பட்டப்படிப்பு மற்றும் முதுகலை படிப்புகளை வழங்குவதற்கான மறுசீரமைப்புத் திட்டத்தை அரசாங்கம் தயாரித்து வருகிறது.
இது குறித்துப் பேசிய உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ரி அப்துல் காதிர், மென்பொருள் , மின்சாரம், மின்னணுவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவான AI போன்ற அதிநவீன தொழில்நுட்பத் துறைகளின் தேவைகளை நிவர்த்தி செய்யவே இந்த மாற்றம் என்றார்.
பாலிடெக்னிக்குகள் இனி குறைந்த அல்லது நடுத்தரத் திறன் பயிற்சியோடு மட்டும் நின்றுவிடக் கூடாது எனக் குறிப்பிட்ட அவர், இதற்கான சட்டத்திருத்த முன்மொழிவுகள் இந்த ஆண்டின் இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றார்.








