தற்போதைக்கு டி20 உயர்வருவாய் பிரிவினருக்கான புடி95 எரிபொருள் மானியத்தை நிறுத்த அரசுக்கு எந்த திட்டமும் இல்லை என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
இன்று மலேசிய வர்த்தக வாகன கண்காட்சியில் பேசிய அந்தோணி லோக், , எரிபொருள் நெருக்கடியை எளிமையாகக் கையாள்வதே அரசின் நோக்கம் என்றார்.
மைக்காட் மூலமாக அனைத்து மக்களுக்கும் எளிதில் மானியம் பெறும் வகையில் இந்த முறை அமைந்துள்ளது. இதன் மூலம் முறைகேடுகள் தவிர்க்கப்படுவதாகவும், தற்போதைய மானிய முறை கடந்த இரண்டு மாதங்களாக தடையின்றி சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








