Jul 28, 2026
Thisaigal NewsYouTube
பொதுச்சேவை ஊழியர்களுக்கான சம்பள உயர்வு திட்டமிட்டப்படி அமலாக்கம் காணும்! பிரதமர் உத்தரவாதம்
தற்போதைய செய்திகள்

பொதுச்சேவை ஊழியர்களுக்கான சம்பள உயர்வு திட்டமிட்டப்படி அமலாக்கம் காணும்! பிரதமர் உத்தரவாதம்

Share:

பொதுச்சேவை ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, அறிவித்தது போல் அமல்படுத்தப்படும்.

அதன் அமலாக்கம் குறித்து பொதுச்சேவை ஊழியர்கள் கவலைப்பட வேண்டியதில்லை என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

கொள்கைச் சார்ந்த பணிகளை செய்துமுடித்த பிறகு, எங்கிருந்து கூடுதல் நிதி மூலம் கிடைக்கும் என்பதை அரசாங்கம் கண்டறிந்துள்ளது.

குறிப்பாக, MICROSOFT உள்பட பல அனைத்துலக நிறுவனங்களின் முதலீடுகளை அரசாங்கம் பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், அதன் அடிப்படையிலேயே பொதுச்சேவை ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டதாக கூறினார்.

இன்னும் அதிகமான முதலீடுகளை கவருவதன் வழி, பொதுச்சேவை ஊழியர்களின் சேவைத் தரமும் நாட்டின் வருமானமும் அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளதாக, இன்று நிதியமைச்சின் பணியாளர்களுடனான கூட்டத்தில் உரையாற்றிய போது பிரதமர் கூறினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்