Mar 18, 2026
Thisaigal NewsYouTube
குற்றச்சாட்டை மறுத்தார் யோகேஸ்வரன்
தற்போதைய செய்திகள்

குற்றச்சாட்டை மறுத்தார் யோகேஸ்வரன்

Share:

கோலாலம்பூர், மார்ச் 14 -

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு லட்சத்து 76 ஆயிரம் வெள்ளியை நம்பிக்கை மோசடி செய்ததாக பாதுகாவலர் நிறுவனம் ஒன்றின் இயக்குநர் ஒருவர் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.

அசாஸ் கூக்கோ, செக்கூரித்தி செர்விசஸ் நிறுவனத்தின் இயக்குநரான 45 வயது யு.யோகேஸ்வரன் கடந்த 2022 ஆம் ஆண்டு மே 13 ஆம் தேதி மெனாரா பூமிபுத்தெரா, பெங்க் முவாலாட் வங்கியில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் வெள்ளியை நம்பிக்கை மோசடி செய்ததாக குற்றச்சாட்டப்பட்டார்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 409 பிரிவின் கீழ் யோகேஸ்வரன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

எனினும், குற்றச்சாட்டை மறுத்து யோகேஸ்வரன் விசாரணை கோரியதை தொடர்ந்து அவரை 30 ஆயிரம் வெள்ளி ஜாமினில் விடுவிப்பதற்கு நீதிபதி அசுரா அல்வி அனுமதி அளித்தார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை