May 22, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை பத்தாங் பெனாரில் எரிப்பொருளின் தாக்கம்
தற்போதைய செய்திகள்

சுங்கை பத்தாங் பெனாரில் எரிப்பொருளின் தாக்கம்

Share:

போர்ட்டிக்சன் அருகிலுள்ள சுங்கை லிங்கி நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் நீர் மாசுபாட்டின் காரணமாக, சுங்கை பத்தாங் பெனாரில் எரிப்பொருளின் தாக்கம் கண்டறியப்பட்டதாக நெகிரி செம்பிலான் சுற்றுச்சூழல் துறை அறிவித்துள்ளது.

இச்சம்பவத்தை தொடர்ந்து, குறிப்பிடப்பட்ட பகுதியில் இன்று நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

முன்னதாக, இதுபோன்று ஒரு தொழிற்சாலையில் எ‌ரிபொரு‌ள் வாசனை கண்டறியப்பட்டதாகவும், ஆனால், அதுக்குறித்து காரணம் எதுவும் கண்டறியப்படவில்லை என்று ரெப்பா சட்டமன்ற உறுப்பினரும் நெகிரி செம்பிலான் மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினருமான S. வீரப்பன் தெரிவித்தார்.

இன்று காலை 7.30 மணியளவில் இதுக்குறித்து தமது தரப்புக்கு தகவல் கிடைக்கப் பெற்ற வேளை, குழு ஒன்று சம்பவ இடத்திற்கு விரைந்ததாக வீரப்பன் கூறினார்.

சுங்கை பத்தாங் பெனாரில் கலந்திருப்பது பெட்ரோல் அல்லது டீசல் எரிப்பொருளா என்பதை கண்டறியபடுவதற்கு முன்பாக, சுங்கை லிங்கி நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் இன்று குறிப்பிட்டார்.

Related News