தாப்பா, குனோங் பத்து புத்தே பகுதியில் காணாமல் போய் மீட்கப்பட்ட பெண் மலையேற்றப் பயணியான ஜஸ்லிந்தா சலுடின் என்பவரை, லுபுக் காஹாரு ஓராங் அஸ்லி கிராமத் தலைவரான தோக் பாத்தின் முகமட் அஸ்மாடி பாதுகாத்து வைத்திருந்தார் என சமூக ஊடகங்களில் பரவிய அவதூறுக்கு எதிராக 50 ஓராங் அஸ்லி பிரதிநிதிகள் போலீஸ் துறையிடம் புகார் அளித்துள்ளனர்.
டிக்டாக் தளத்தில் பரவிய வீடியோ ஒன்றில், அந்தப் பெண்ணை கிராமத் தலைவர் இரண்டு வாரங்கள் அடைத்து வைத்திருந்ததாகவும், இந்த விஷயம் வைரலாகாமல் இருந்திருந்தால் அவர் அவளைத் திருமணம் செய்திருப்பார் என்றும் ஆதாரமற்றக் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருந்தன.
இந்த அவதூறு ஒட்டுமொத்த ஓராங் அஸ்லி சமூகத்தின் கண்ணியத்தைப் புண்படுத்தியுள்ளதாகவும், அவசரக் காலங்களில் பிறருக்கு உதவும் தங்களின் நற்பெயரைக் கெடுத்துள்ளதாகவும் கூறி, சம்பந்தப்பட்ட நபர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








