Kelantan - னில் மேற்கொண்ட திடீர் சோதனையில் 33 சட்டவிரோத குடியேறிகள் உட்பட இரண்டு உள்ளூர் ஆண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஜூன் 10 ஆம் தேதி Kubang Kerian, Lembah Sireh மற்றும் Kota Baru ஆகிய பகுதிகளில் அந்நபர்கள் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத்துறையின் இயக்குநர் Datuk Ruslin Jusoh இன்று அறிவித்தார்.
இதில், 20 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதுடைய ஆண்கள் மற்றும் பெண்கள் கைது செய்யப்பட்டதாக Ruslin Jusoh கூறினார்.ஒவ்வொரு குற்றச் செயல்களுக்கும் தலா 2,000 வெள்ளி முதல் 3,000 வெள்ளி வரையில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.








