நாட்டில் நிலவும் உலகளாவிய பொருளாதார அழுத்தம் காரணமாக, இந்திய முஸ்லிம் உணவகங்களின் செயல்பாட்டுச் செலவுகள் 10 விழுக்காடு முதல் 30 விழுக்காடு வரை அதிகரித்துள்ளதாக மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கமான Presma தெரிவித்துள்ளது.
பொருட்களின் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள தடைகள், போக்குவரத்துச் செலவு அதிகரிப்பு மற்றும் ஈரான் போர் போன்ற உலகளாவிய அரசியல் பதற்றங்களே இந்த விலையேற்றத்திற்குக் காரணம் என சங்கத்தின் தலைவர் மோசின் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கோழி இறைச்சி, காய்கறிகள், சமையல் எரிவாயு மற்றும் பேக்கேஜிங் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
இருப்பினும், வாடிக்கையாளர்களுக்குப் சுமை கொடுக்காமல் இருக்க பெரும்பாலான உணவக உரிமையாளர்கள் தற்போதைய விலையிலேயே உணவுகளை வழங்க முயற்சி செய்து வருகின்றனர்.
ஆனால், இந்த விலை உயர்வு நீடித்தால் உணவுகளின் விலையில் சிறிய மாற்றங்களைச் செய்வது தவிர்க்க முடியாதது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








