முவார், மே 02-
தமக்கு நன்கு அறிமுகமானவரின் மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக வீடு கட்டும் தச்சர் ஒருவர் முவார் சேசியேன் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.
24 வயது முஹம்மது சாருல் ஹாஷிம் எம்.டி நோர்டன்@நோர்டின் என்கிற அந்த தச்சர் நீதிபதி அபு பக்கர் மனாத் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டுகள் சிறை மற்றும் பிரம்படி விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 376 (1) பிரிவின் கீழ் அந்நபர் குற்றச்சாட்டப்படுவார்.
முவார், பத்து பஹாட், யோங் பெங்கில் உள்ள ஒரு வீட்டில் மாலை 5 மணியளவில் 12 வயது அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக அந்நபர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.








