Mar 19, 2026
Thisaigal NewsYouTube
ஓட்டுநர் உரிமம் இல்லாத பெண் மோட்டார்சைக்கிளோட்டி கைது
தற்போதைய செய்திகள்

ஓட்டுநர் உரிமம் இல்லாத பெண் மோட்டார்சைக்கிளோட்டி கைது

Share:

சிலாங்கூர், ஏப்ரல் 04-

23 வயது பெண் மோட்டார்சைக்கிளோட்டி சாலைப் போக்குவரத்து துறை ஜேபிஜே-யின் சாலை தடுப்பு சோதனையின் போது வசமாக சிக்கியதாக தெரியவந்துள்ளது.

சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட அச்சோதனையில், தனது நண்பருடன் வீட்டை நோக்கி சென்றுக்கொண்டிருந்த அப்பெண், தாம் செல்லவேண்டிய பாதையை தவறவிட்டதால் வேறு வழிகளின்றி அச்சோதனையில் அகப்பட்டுக்கொண்டார்.

தனியார் மருத்துவ பணியாளரான அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஓட்டுநர் உரிமத்தைக் கொண்டிருக்காதது உறுதி செய்யப்பட்ட வேளை, அவரது யமாஹா 135LC மோட்டார்சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, அவரும் அவரது நண்பரும் தடுத்து வைக்கப்பட்டனர்.

Related News