Mar 10, 2026
Thisaigal NewsYouTube
திருமணத்தை ஒத்திவைக்க பொய்யான போலீஸ் புகார்
தற்போதைய செய்திகள்

திருமணத்தை ஒத்திவைக்க பொய்யான போலீஸ் புகார்

Share:

தமது திருமணத்தை ஒத்திவைப்பதற்கு திட்டமிட்ட உணவு விநியோகிப்பாளர் ஒருவர், தனது திருமண செலவுக்கு வைத்திருந்த 9 ஆயிரம் வெள்ளி ரொக்கப் பணத்தை நான்கு நபர்கள் வழிமறித்து, கொள்ளையடித்து சென்று விட்டனர் என்று பொய் போலீஸ் புகார் செய்து இருப்பதாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அரிபாய் தாராவே தெரிவித்தார்.

22 வயதுடைய அந்த நபர் செய்த போலீஸ் புகாரின் அடிப்படையில் அவரை போலீசார் விசாரணை செய்த போது முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்ததைத் தொடர்ந்து போலீசாருக்கு சந்தேகம் எழுந்ததாக ஏசிபி அரிபாய் தாராவே குறிப்பிட்டார்.

சிரம்பான், ரந்தாவ் வில் நேற்று இரவு 10.30 மணியளவில் இந்த கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்ததாக அந்த நபர் போலீசில் புகார் செய்த போதிலும் போலீசார் நடத்திய விசாரணையில் அப்படியொரு சம்பவம் நிகழவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரிபாய் தாராவே தெரிவித்தார்.

திருமணம் நடத்துவதற்கு போதுமான பணம் தம்மிடம் இல்லை என்பதால் பெண் வீட்டாரை சமாளிக்கவே இப்படியொரு நாடகம் ஆடியதாக அந்த இளைஞர் விசாரணையில் ஒப்புக்கொண்டதாக அவர் குறிப்பிட்டார். அதேவேளையில் அந்த நபர், இதற்கு முன்பு எந்தவொரு குற்றப்பதிவையும் கொண்டிருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளதாக அரிபாய் தாராவே தெரிவித்தார்.

Related News

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சுங்கைப் பட்டாணியில் இந்திய இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை - மூவர் கைது

சுங்கைப் பட்டாணியில் இந்திய இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை - மூவர் கைது

சொஸ்மா சட்டத்தின் கீழ், கொள்ளை கும்பலைச் சேர்ந்த எட்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது

சொஸ்மா சட்டத்தின் கீழ், கொள்ளை கும்பலைச் சேர்ந்த எட்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது