Mar 19, 2026
Thisaigal NewsYouTube
நோன்பு பெருநாளுக்கு கூடுதல் விடுமுறை வழங்கப்படாது, பிரதமரின் அறிவிப்பை Cuepacs வரவேற்றது
தற்போதைய செய்திகள்

நோன்பு பெருநாளுக்கு கூடுதல் விடுமுறை வழங்கப்படாது, பிரதமரின் அறிவிப்பை Cuepacs வரவேற்றது

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 29-

கடந்தாண்டு பொதுச்சேவை ஊழியர்களுக்கு நோன்பு பெருநாளுக்கு கூடுதல் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், இவ்வாண்டு அதற்கு துளியும் சாத்தியமில்லை என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று கூறியிருந்தார்.

பொதுச்சேவை ஊழியர்கள் பெருநாளுக்கு கூடுதல் விடுமுறையைக் கோருவதைக் காட்டிலும் வேலை செய்வதற்கான உத்வேகத்தைக் கொள்ள வேண்டுமெனவும் பிரதமர் அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், பிரதமரின் அக்கூற்றை Cuepacs எனப்படும் பொதுச்சேவை ஊழியர்களுக்கான தொழிற்சங்க காங்கிரஸ்சின் பொதுச்செயலாளர் அப்துல் ரஹ்மான் மோஹட் நோர்டின் வரவேற்றுள்ளார்.

இதற்கு முன்பு, பொதுச்சேவை ஊழியர்களுக்கு அதிகமான பொதுவிடுமுறை வழங்கப்பட்டுவிட்டதால், நோன்பு பெருநாளுக்கு கூடுதல் விடுமுறை வழங்கப்பட வேண்டியதில்லை என்றாரவர்.

அப்படி கூடுதல் விடுமுறை வேண்டுமென்றால், வருடாந்திர விடுமுறையைப் பயன்படுத்திக்கொள்ளும்படி பொதுச்சேவை ஊழியர்களுக்கு அப்துல் ரஹ்மான் மோஹட் நோர்டின் ஆலோசனை விடுத்தார்.

Related News

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை