Jul 27, 2026
Thisaigal NewsYouTube
நோன்பு பெருநாளுக்கு கூடுதல் விடுமுறை வழங்கப்படாது, பிரதமரின் அறிவிப்பை Cuepacs வரவேற்றது
தற்போதைய செய்திகள்

நோன்பு பெருநாளுக்கு கூடுதல் விடுமுறை வழங்கப்படாது, பிரதமரின் அறிவிப்பை Cuepacs வரவேற்றது

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 29-

கடந்தாண்டு பொதுச்சேவை ஊழியர்களுக்கு நோன்பு பெருநாளுக்கு கூடுதல் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், இவ்வாண்டு அதற்கு துளியும் சாத்தியமில்லை என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று கூறியிருந்தார்.

பொதுச்சேவை ஊழியர்கள் பெருநாளுக்கு கூடுதல் விடுமுறையைக் கோருவதைக் காட்டிலும் வேலை செய்வதற்கான உத்வேகத்தைக் கொள்ள வேண்டுமெனவும் பிரதமர் அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், பிரதமரின் அக்கூற்றை Cuepacs எனப்படும் பொதுச்சேவை ஊழியர்களுக்கான தொழிற்சங்க காங்கிரஸ்சின் பொதுச்செயலாளர் அப்துல் ரஹ்மான் மோஹட் நோர்டின் வரவேற்றுள்ளார்.

இதற்கு முன்பு, பொதுச்சேவை ஊழியர்களுக்கு அதிகமான பொதுவிடுமுறை வழங்கப்பட்டுவிட்டதால், நோன்பு பெருநாளுக்கு கூடுதல் விடுமுறை வழங்கப்பட வேண்டியதில்லை என்றாரவர்.

அப்படி கூடுதல் விடுமுறை வேண்டுமென்றால், வருடாந்திர விடுமுறையைப் பயன்படுத்திக்கொள்ளும்படி பொதுச்சேவை ஊழியர்களுக்கு அப்துல் ரஹ்மான் மோஹட் நோர்டின் ஆலோசனை விடுத்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்