மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் வேக கட்டுப்பாட்டை இழந்து, சாலைத்தடுப்பில் மோதி கீழே விழுந்து மரணமுற்றார்.
இச்சம்பவம் இன்று காலை 6.45 மணியளவில் எல்.பி.தி1 கிழக்குக்கரை நெடுஞ்சாலையின் 211.2 இரண்டாவது கிலோமீட்டரில் குவந்தானுக்கு அருகில் நிகழ்ந்தது.
சிலாங்கூர், காப்பாரைச் சேர்ந்த அகமட் எமிர் டேனியல் அகமட் அம்டான் என்ற 22 வயதுடைய இளைஞர் இச்சம்பவத்தில் மாண்டதாக போலீசார் அடையாளம் கூறினர்.
தமது Yamaha 125 ரக மோட்டார் சைக்கிளில் காப்பாரில் இருந்து கோலத்திரங்கானுவிற்கு அந்த இளைஞர் பயணம் செய்த பொழுது இவ்விபத்து நிகழ்ந்ததாக குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் முஹம்மது ஜஹாரி வான் புசு தெரிவித்தார்.

Related News

நாடெங்கிலும் சுகாதார மையங்களின் கட்டுமானப் பணிகளை அரசாங்கம் விரைவுபடுத்தும்: சுகாதார அமைச்சு

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

நகர்ப்புற மறுமேம்பாட்டு மசோதாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்: KPKT உறுதி

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்


