Jul 28, 2026
Thisaigal NewsYouTube
2026 Komanwel விளையாட்டுப் போட்டியை ஏற்று நடத்துவதை தீர ஆராய்வீர்!
தற்போதைய செய்திகள்

2026 Komanwel விளையாட்டுப் போட்டியை ஏற்று நடத்துவதை தீர ஆராய்வீர்!

Share:

கோலாலம்பூர், மார்ச் 15 -


2026 Komanwel போட்டியை ஏற்று நடத்தும் முடிவை எடுப்பதற்கு முன்னர், அது குறித்து மலேசிய அரசாங்கம் முழுமையாகவும் ஆழமாகவும் ஆராய்வது அவசியம் என இளைஞர் மற்றும் விளையாட்டு முன்னாள் அமைச்சர் டத்துக் ஶ்ரீ ரீசென் மெரிக்கன் னைனா மெரிக்கன் வலியுருத்தினார்.

சம்பந்தப்பட்ட போட்டிக்கு இன்னும் ஈராண்டுகளே எஞ்சியிருக்கின்ற சூழலில், அந்த குறுகிய காலத்தில் அப்போட்டிக்கான தயார்நிலை பணிகளை மேற்கொள்வது கடினம் என்றாரவர்.

2026 Komanwel போட்டியை ஏற்று நடத்தும் வாய்ப்பு மலேசியாவுக்கு முறையான திட்டமிடலின் கீழ் வழங்கப்படவில்லை.

அப்போட்டியை ஏற்று நடத்துவதிலிருந்து ஆச்திரோலியா வின் விக்தோரியா மாநிலம் பின்வாங்கியதை தொடர்ந்து மலேசியாவுக்கு திடீரென அந்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

1998ஆம் ஆண்டில் Komanwel போட்டியை மலேசியா சிறப்பாக நடத்தி முடித்திருப்பதால், நம் நாட்டிற்கு அப்போட்டியை நடத்தும் தகுதி உள்ளதாக கருதி Komanwel விளையாட்டு சம்மேளனம் அந்த வாய்ப்பை வழங்குகின்றது.

மிக குறுகிய காலத்தில் விளையாட்டு அரங்குகள், தன்னார்வலர்கள் உள்பட அனைத்து விளையாட்டு கூறுகளை தயார் செய்வது இயலாத காரியம் எனவும் டத்துக் ஶ்ரீ ரீசென் மெரிக்கன் கூறினார்.

Komanwel போட்டியை ஏற்று நடத்தினால், மலேசியாவின் நிதி தேவைக்கு ஆதரவளிக்க Komanwel விளையாட்டு சம்மேளனம் மலேசிய மதிப்பில் 601 மில்லியன் ரிங்கிட் நிதியை அளிக்கவுள்ளது.

அது குறித்து, கருத்துரைத்த டத்துக் ஶ்ரீ ரீசென் மெரிக்கன், அப்போட்டிக்கு மிகப் பெரிய தொகை தேவைப்படுவதாகவும் அடுத்தாண்டு மலேசியா உலகத் தலைவர்கள் கலந்துக்கொள்ளும் ஆசியான் மாநாட்டை ஏற்று நடத்தவுள்ளதால் அதற்கும் அதிக செலவுகள் செய்ய வேண்டியுள்ளதை சுட்டிக்காட்டினார்.

Komanwel போட்டியைவிட, ஆசிய விளையாட்டு போட்டியையும் தனித்தும் ஒலிம்பிக் போட்டியை ஆசியான் நாடுகளுடன் இணைந்து நடத்துவதிலும் மலேசியா கவனம் செலுத்த வேண்டுமெனவும் டத்துக் ஶ்ரீ ரீசென் மெரிக்கன் கேட்டுக்கொண்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்