Jan 24, 2026
Thisaigal NewsYouTube
வங்கியில் துப்பாக்கி சூடு, மூவர் காயம்
தற்போதைய செய்திகள்

வங்கியில் துப்பாக்கி சூடு, மூவர் காயம்

Share:

தோட்ட நிர்வாகம் சார்பில் அதன் அதிகாரிகளுடன் சம்பளப் பணத்தை எடுப்பதற்கு பாதுகாப்பு வழங்குவதற்காக வங்கிற்கு வந்திருந்த தோட்ட உதவி போலீஸ்காரரின் துப்பாக்கியிலிருந்து தற்செயலாக வெளியேறிய துப்பாக்கி குண்டுகள் வங்கியில் இருந்த மூவரை காயப்படுத்தின.

இச்சம்பவம் இன்று பிற்பகல் 12.55 மணியளவில் மலாக்கா ஜாசினில் உள்ள ஒரு வங்கியில் நிகழ்ந்தது. இதில் வங்கியில் இருந்த 26 மற்றும் 46 வயதுடைய இரண்டு பெண் வாடிக்கையாளர்கள் மற்றும் 26 வயதுடைய வங்கியின் பாதுகாவளர் காயமடைந்தனர் என்று ஜாசின் மாவட்ட போலீஸ் துணைத்தலைவர் அகமட் ஜமில் ராட்ஷி தெரிவித்தார்.

மூவரும் சிறுகாயங்களுடன் உயிர் தப்பியதாக குறிப்பிட்ட அகமட் ஜமில், அந்த உதவி போலீஸ்காரர் வைத்திருந்த பம்கன் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டதாக குறிப்பிட்டார்.

இச்சம்பவத்தில் கவனக்குறைவு நிகழ்ந்திருப்பதாக கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அந்த உதவி போலீஸ்காரரும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜமில் கூறினார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர்  நியமனம்

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக  பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள்  நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு