தோட்ட நிர்வாகம் சார்பில் அதன் அதிகாரிகளுடன் சம்பளப் பணத்தை எடுப்பதற்கு பாதுகாப்பு வழங்குவதற்காக வங்கிற்கு வந்திருந்த தோட்ட உதவி போலீஸ்காரரின் துப்பாக்கியிலிருந்து தற்செயலாக வெளியேறிய துப்பாக்கி குண்டுகள் வங்கியில் இருந்த மூவரை காயப்படுத்தின.
இச்சம்பவம் இன்று பிற்பகல் 12.55 மணியளவில் மலாக்கா ஜாசினில் உள்ள ஒரு வங்கியில் நிகழ்ந்தது. இதில் வங்கியில் இருந்த 26 மற்றும் 46 வயதுடைய இரண்டு பெண் வாடிக்கையாளர்கள் மற்றும் 26 வயதுடைய வங்கியின் பாதுகாவளர் காயமடைந்தனர் என்று ஜாசின் மாவட்ட போலீஸ் துணைத்தலைவர் அகமட் ஜமில் ராட்ஷி தெரிவித்தார்.
மூவரும் சிறுகாயங்களுடன் உயிர் தப்பியதாக குறிப்பிட்ட அகமட் ஜமில், அந்த உதவி போலீஸ்காரர் வைத்திருந்த பம்கன் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டதாக குறிப்பிட்டார்.
இச்சம்பவத்தில் கவனக்குறைவு நிகழ்ந்திருப்பதாக கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அந்த உதவி போலீஸ்காரரும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜமில் கூறினார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்


