கோத்தா திங்கி, மே 04-
இன்று சனிக்கிழமை அதிகாலையில் பெய்த கனத்த மழையில் ஜோகூர், கோத்தா திங்கியில் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.
இந்த திடீர் வெள்ளம் தீவைப்போல் நீர் சூழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மதியம் 12.30 மணி வரையில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 22 பேர் புக்கிட் லின்த்தாங் தேசிய தொடக்கப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரொஹானி தெரிவித்துள்ளார்.
கோத்தா திங்கியில் கம்போங் டெமினின் மற்றும் கம்போங் டேசா மக்மூர் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.








